Monday, September 5, 2016

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      



மரபணு மூலம் விளையும் தக்காளியில், தவளையின் "ஸ்டெம் செல்" இருக்கிறதாம்!
அப்ப... தவளைக்கறி உள்ள தக்காளி சைவமா? அசைவமா?

 
 
செத்த மாட்டைத் தூக்க மாட்டோம், கழிவறையைச் சுத்தம் செய்ய மாட்டோம், பிணம் எரிக்க மாட்டோம் என்றால் நீயும் எம் தோழனே!

 
 
பசு மாடு எங்கள் தாய் - ஆர்.எஸ்.எஸ்.
இனி உங்கள் தாய் இறந்தால், நீங்களே தூக்கிக் கொள்ளுங்கள்!

 
 
"அடுத்த வீட்டுகாரருடன் நட்பாய் இரு!அதற்காக இடையில் உள்ள சுவரை எடுத்து விடாதே!
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!

 
 
பார்ப்பனீயத்திடம் தன்னை விற்றுக் கொண்டு, தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பெங்களூர் குணா, விடுதலைச் சிறுத்தைகள் இரவிக்குமார், நாம் தமிழர் சீமான்.

 
 
முக"நூல்" ஆபத்து - தந்தி டிவி பாண்டே
உம் முதுகில் தொங்கும் "நூலை" விடவா?

 
 
70 ஆவது சுதந்திர தினம் நாளைக்கு!
யாருக்கு?

 
 
தமிழ்த்தாய், தமிழ்த்தாய் என்கிறீர்களே... அவர் எங்கு இருக்கிறார்?
நீங்கள் பாரதத் தாய், பாரதத் தாய் என்கிறீர்களே, அவரின் பக்கத்து வீடு - சி.பி.சிற்றரசு

 
 
364 நாளும் இந்தியாவை "செல்லரிக்க" வைக்கும் அரசியல்வாதிகள், ஆகஸ்ட் 15 மட்டும் "புல்லரிக்க" வைக்கிறார்கள்!

 
 
"கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள் உருப்பட மாட்டீர்கள்", என்றார் நண்பர்.
பரவாயில்லை! நீங்க நல்லா இருந்தா போதும்!

 
 
பெண்களைக் கேவலமாக நினைக்கும் இந்த நாட்டிற்குத் தான், ஒரு பெண் வெண்கலம் வாங்கித் தந்துள்ளார்!
பாராட்டுகள் சாக்சி மாலிக்!

 
 
அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகையைக் கண்டுபிடிக்க, உத்ரகாண்ட் அரசு 25 கோடி ஒதுக்கீடு!
நல்ல வேளை! அனுமாரைக் கண்டுபிடிக்க 250 கோடி ஒதுக்கவில்லை!

 
 
அரசியலில் விளையாட்டும், விளையாட்டில் அரசியலும் இருப்பதால், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. மன்னிக்கவும் ஜெய்ஷா!
பாரத் மாதா கி ஜெய்!

 
 
இந்தியாவில் இந்து மதத்தையும், பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தையும் ஒழித்து விட்டால், இரு நாடுகளும் இன்பம் பெறும்!

 
 
"சமஸ்கிருதம் தேவை" என்பதை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சொல்லிவிட்டார்கள்.
சமஸ்கிருத மொழியில் மட்டும் இன்னும் சொல்லவே இல்லை!

 
 
பாதயாத்திரை எனும் பெயரில், குழந்தைகளைத் தரதரவென இழுத்துப் போகிற பெற்றோர்கள் கொடுமையானவர்கள்!

 
 
பயப்படும் அளவு பிள்ளையார் செய்து, வீதி தோறும் விசில் அடித்து, மக்களை விரட்டியும், மிரட்டியும் ஊர்வலம் சென்று, பின்னர் தண்ணீரில் மூழ்கடித்து, தேவைப்பட்டால் கிரேனில் தூக்குமாட்டி, சில நேரங்களில் அடித்தும், உடைத்தும், தொப்பையில் ஏறி நின்றுமாக உங்கள் விநாயகர் பக்தியைத் தொடங்குங்கள் பக்தர்களே!

 
 

No comments:

Post a Comment